Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தாராசுரம் மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம்

நவம்பர் 04, 2019 04:04

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் தாராசுரம் மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்கள்.

கும்பகோணத்தில் தமிழகத்தில் பெய்து வரும் தீவிர பருவ மழையின் காரணமாக  சுகாதாரத்தை பாதிக்கும் வகையில் கொசு உற்பத்தி அதிகமாக பெருகிவருகிறது  கொசுவை ஒழிப்பதற்கு தினமும் காலையில் தாராசுரம் மார்க்கெட்டிற்கு சுமார் 5000த்திற்க்கு மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

பொதுமக்களுக்கு டெங்கு வராமல் தடுப்பதற்கும்  உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் தாராசுரம் மார்க்கெட்டில்  சுமார் 1000க்கும் மேற்பட்ட மார்க்கெட் மொத்த சில்லறை வியாபாரிகள் அங்கு வரும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை  மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம்  ஒன்றிய செயலாளர் அசோக்குமார் நகரச் செயலாளர் தமிழழகன் உதயநிதி ரசிகர் மன்ற மாவட்ட துணைத்தலைவர் அழகேசன் ஸ்ரீதர் ஆகியோர் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட நற்பணி மன்ற பொறுப்பாளர்கள் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்